விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகளுக்கிடையே ஆந்திர மாநிலத்திற்கு புதிய தலைநகரம் உருவாகவுள்ளது. இந்நிலையில், தலைநகர் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு நில கையகப்படுத்தலுக்காக சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிலக்கிழார்களை சம்மதிக்க வைக்க குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆலோசனைக் கமிட்டி தலைநகரை அமைக்க ஒரு லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இப்போது ஆந்திர அரசு 30,000 ஏக்கர் நிலமே போதுமானது என்று அறிவித்துள்ளது.
அதேபோல், அவர்களுக்கு ஆண்டுதோறும் 5 சதவீத விலையுயர்வுக்கும் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. அதற்கான, பத்திரப்பதிவு, ஸ்டாம்ப் டூட்டி மற்றும் இதர கட்டணங்களும் இலவசமாக வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.