நெல்லை, லட்சுமிராமன் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், கம்ப்யூட்டர் துறையில், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் சி.சி.என்.ஏ., மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., சி.சி.எஸ்.ஏ. போன்ற கடினமான தேர்வுகளைக் கூட மிக எளிதாக எழுதி வெற்றி பெற்றார். இதனால், சிறுவயதிலேயே கம்ப்யூட்டர் துறையில் சாதனை படைத்தார்.
இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று 4ஆம் தேதி, காலை 11 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுடன் டெல்லியில் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். அப்போது, மாணவி விசாலினியுடன் பேசுகின்றார். விசாலினிக்கு மோடி பாராட்டு தெரிக்க உள்ளார்.