புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா மரணம்

சனி, 5 செப்டம்பர் 2015 (11:41 IST)
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தார். 1966 செப்டம்பர் 4 ஆம் தேதி ஜபல்புரில் பிறந்த ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா சல்தி சல்தி, கபி குசி கபி காம் போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் தனியிடத்தை பிடித்தவர்.

சமீப நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா தனியார் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 12.30 மணி அளவில் ஆதேஷின் உயிர் பிரிந்தது.

இத்துயரச் செய்தி கேட்டு அறிந்த பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மறைந்த ஆதேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இயக்குநர் அபினவ் சின்ஹா ஆகியோர் டூவிட்டர் பக்கங்களில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அதேஷ் ஸ்ரீவஸ்தவாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்