2வது நாளாக முன்னேறும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு ஆறுதல்!

வெள்ளி, 24 ஜூன் 2022 (11:34 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது தான் ஓரளவு முன்னேறிக்கொண்டு வருகிறது
 
அந்த வகையில் நேற்று சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 600 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை 120 புள்ளிகள் வரை உயர்ந்தது 15670 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்