உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம், 108 கிலோ எடையை குறைத்து, இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆனந்த் அம்பானி எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
தன்னுடைய உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்த ஆனந்த், அதற்கான தீவிர பயிற்சியில் இறங்கினார். தினமும் 21 கிலோமீட்டர் நடை பயிற்சி மற்றும் யோகா பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டார். மேலும் கடுமையான உணவு கட்டுப்பாடும் மேற்கொண்டார்.
கொழுப்பு சத்து இல்லாத உணவுகளை மட்டுமே அவர் சாப்பிட்டார். இதனால் அவரின் உடல் படிப்படியாக குறையத் தொடங்கியது. அந்த உடல் குறைப்பு முழுக்க முழுக்க இயற்கை முறையில் எட்டப்பட்டது எனவும், இதனால், அவருக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
தன் மகன் உடல் எடையை குறைத்தது குறித்து அவரின் தந்தி முகேஷ் அம்பானி மற்றும் தாய் நீட்ட அம்பானி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனவே அவரது பழைய மற்றும் புதிய புகைப்படங்களை இணைத்து, நெட்டிசன்கள், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கலை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள்.