இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பாஜக ஆட்சியில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுக அதிகாரத்தில் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், பாஜக அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் ஆலோசனைக்காக நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு எதற்கு ஓடுகின்றனர்?
மோடி, இதே பாணியில் மத்திய அரசை தொடர்ந்து நடத்தினால், அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது; மற்றவர்களை குறை கூறி தங்கள் சுயரூபத்தை பாஜக மறைக்க முயல்கிறது” இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.