முகக்கவசம் அணியமாட்டேன் எனக் கூறிய அமைச்சர்… எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து பல்டி!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:20 IST)
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பொது நிகழ்ச்சிகளில் மாஸ்க் அணியமாட்டேன் எனக் கூறியது சர்ச்சைகளை உருவாக்கியது.

மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மாநில பா.ஜ.க. உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நான் எந்த பொது நிகழ்ச்சியிலும் மாஸ்க் அணியமாட்டேன் எனப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய் எதிர்ப்பை உருவாக்கியது.

இதையடுத்து இப்போது அவர் தன் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் தன் வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்