கல்யாண ஊர்வலத்தில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாயபெஸ்டி – பிறகு நடந்த கலாட்டா!

சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:00 IST)
தெலங்கானா மாநிலத்தில் கல்யாணத்துக்கு விருந்தினர் போல வந்த ஒருவர் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ளது ஹுஸுராபாத்தில் நட்னத திருமணத்துக்கு மனப்பெண்ணின் விருந்தினராக வந்துள்ளார் அந்த நபர். கல்யாண ஊர்வலத்தில் தலை கவிழும் அளவுக்கு போதையில் வந்த அவர், ஒரு கட்டத்தில் மனப்பெண்ணை இறுக்கி அணைத்து உம்மா கொடுத்துள்ளார். இதைப்பார்த்த மணமகன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைய போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
அவர்கள் வந்து அந்த நபரைக் கைது செய்ய முனையும் போது, மணப்பெண் தானும் அந்த நபரைக் காதலிப்பதாகவும், எங்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றும் சொல்லியுள்ளார். அதன் பின் வேறு வழியில்லாமல் போலிஸார் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்