இந்த நிலையில், மகாராஷ்டிராவில் தற்போது நான்கு கிராம பஞ்சாயத்துகளில் இந்த பிரச்சனைக்கு புதிய திட்டம் இயற்றப்பட்டுள்ளது. புல்தானா மாவட்டத்தில் உள்ள பட்காவ், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிகாலி, பாலேகுல், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவாலே ஆகிய கிராமங்களில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்த்தால் அந்த பெற்றோரின் சொத்துக்களுக்கான சொத்து வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த திட்டத்தை பஞ்சாயத்து அளவில் தொடங்கி, அதன்பின் நகராட்சி, மாநகராட்சி என மாநில முழுவதும் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.