பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தைச் சுற்றிலும் இன்று இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் சிறை வளாகம் அமைதியாக உள்ளதாகப் பெங்களுரு மாநகரக் காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மத்திய சிறைச்சாலை அருகில் கூடியுள்ளோர் எண்ணிக்கை, மிகப் பெரிய அளவில் இல்லை. சூழல் அமைதியாகவும் இயல்பாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.