இதனைத்தொடர்ந்து வெளிவந்த தகவலின் படி எல்ஐசி பங்குகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. எல்ஐசி பங்குகள் மூலம் 60,000 கோடியை மத்திய அரசு திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் பங்கு வெளியீட்டு தேதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்பட்டது.
அதன்படி அடுத்த மாதம் 4 ஆம் தேதி எல்ஐசியில் பொது பங்குகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22 கோடி பங்குகள் வெளியிட்டு 21,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.