லக்கிம்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் மக்களவையில் ஒத்திவைப்பு!

புதன், 15 டிசம்பர் 2021 (12:20 IST)
லக்கிம்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேசமாக பேசி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது கார் மோதியது திட்டமிட்ட படுகொலை என சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
இந்த அறிக்கை காரணமாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி செய்து வருகின்றனர்
 
இதனால் மக்களவையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்