கேரளாவில் மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:58 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் தினந்தோறும் கொரோனா  வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது
 
இன்று கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கேரளாவில் இன்று ஒரே நாளில் 20,224 பேர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 17,142 பேர்கள் இன்று குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கேரளாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,82,285  என்றும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 19,345 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 1,19,385 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்