ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா பகுதியை சேர்ந்தவர் குஷ்பு குமாரி. 17 வயதான இவர், ஜார்க்கண்ட் மாநில கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரின் வீட்டில் கழிப்பறை இல்லாததால், இயற்கை உபாதைகளுக்கு வெட்ட வெளியைத் தேடி செல்லவோ அல்லது நெடுந்தூரம் இருக்கும் அவரின் பாட்டி வீட்டுக்கோ செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை எனத்தெரிகிறது. இதனை மனமுடைந்த குஷ்பு, தனது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குஷ்புவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.