சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ஆர்.கே. அகர்வால் உத்தரவிட்டனர். மேலும் 4 பேரும் பதில் மனுதாக்கல் செய்த பிறகு திமுக, கர்நாடகாவும் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.