ரெண்டு பென்ஷன் வேணுமா? அப்போ நீங்க ஆந்திராவுக்கு தான் போகனும்..

திங்கள், 16 டிசம்பர் 2019 (14:22 IST)
ஒரே கும்பத்திற்கு 2 - 3 பென்ஷன் பெரும் வசதியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டுவந்துள்ளார். 
 
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது ஒரு குடும்பத்தில் ஒரு விதவை அல்லது ஒரு முதியவர் ஓய்வூதியம் பெற்றாலும், அதே குடும்பத்தில் ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் அவருக்கும் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
 
அதோடு முதியவர்களுக்கான ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 60 ஆக குறைத்தும் உத்தரவிட்டுள்ளார். முதியவர் மற்றும் விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,250, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்