தற்கொலையின் போது செல்ஃபி: பரவும் புது டிரண்ட்

வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (14:42 IST)
புனேவில் ஐடி நிறுவன ஊழியர் அபிஷேக் குமார் என்பவர், தான் தற்கொலையை செய்தவதை செல்ஃபி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.



 


உத்திரபிரேதச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார்(23) புனேவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.

நேற்று காலை வீட்டில் உள்ள தனது அறைக்குள் போர்வையை கழுத்தில் சுருக்கிக் கொண்டு, அதை நண்பர்களுக்கு செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் தற்கொலை செய்துக்கொண்டார். புகைப்படம் கிடைத்த வீட்டில் இருந்த சக நண்பர்கள் ஒருவர் அறை கதவை உடைத்து பார்த்தபோது அபிஷேன் தற்கொலை செய்துக்கொண்டார்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அபிஷேன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்