நாயை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட 22 வயது இளைஞன்!

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (13:03 IST)
மது போதையில் ஹைதராபாத்தில் இளஞன் ஒருவன் நாயை கொன்று அதனுடன் உடலுறவு கொண்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
நேபாளத்தை சேர்ந்த 22 வயதான சுபாஷ் சிங் என்பவர் தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக ஹைதராபாத் வந்துள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்திய சுபாஷ் சிங் ஹைதராபாத்தின் சாஸ்திரிபுரம் நகரில் உள்ள ஒரு பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்றை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.
 
பின்னர் போதை தலைக்கேறியதில் அந்த இளைஞன் நாயின் பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளான். அப்போது நாயின் உரிமையாளரின் மகன் நாயை தேடி வரும் போது சுபாஷ் சிங் கையும் களவுமாக பிடிபட்டார்.
 
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞனை கட்டி வைத்து அடித்து பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் போது அந்த இளஞன் மது மற்றும் போதை மாத்திரை சாப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
நாயின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுபாஷ் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறைனர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்