இரண்டு மாதங்களுக்கு முன் ஜோதி மத வழிபாட்டு விசாவை கொண்டு பாகிஸ்தான் சென்று, கடாஸ்ராஜ் கோவிலில் ஜீஷானை சந்தித்துள்ளார். இதை தொடர்ந்து இருவரும் தங்கள் யூடியூப் சேனல்களில் பாகிஸ்தானை புகழ்ந்து வீடியோக்கள் வெளியிட்டனர். ஆனால் பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் கோவில்களுக்கு எதிராக நடக்கும் நடைமுறைகள் உலகுக்கு தெரிந்தவை.
இந்நிலையில் ஜோதி கடந்த ஆண்டு ஏப்ரலில் உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஷ்வர் கோவிலுக்கு சென்றிருந்தது தெரிய வந்ததால், மத்தியப்பிரதேச போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சந்தேகத்திற்கு உரிய எந்த தகவலும் இல்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.