இந்தக் கப்பலை அருங்காட்சியத்துடன் கூடிய சொகுசு நட்சத்திர ஓட்டலாக மாற்றுவதற்கு ஆந்திர அரசு பணிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் கப்பலை மாற்றி அமைப்பதற்காக இந்திய கடற்படையின் உதவியை நாடியுள்ள ஆந்திர மாநில அரசானது, இத்திட்டத்தின் மூலம் பெருவாரியான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் எனக் கூறுகிறது.
சுமார் 1500 அறைகளை கொண்ட இக்கப்பலை கரைக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு சுமார் 400 கோடி ரூபா வரை செலவாகும் எனவும், கப்பலின் அமைப்பு ரீயான மாற்றம் மற்றும் அருங்காட்சியக அமைப்பை உருவாக்கல் என்பவற்றிற்கு 300 கோடி ரூபா வரை செலவாகும் என திட்ட அமைப்பாளர்களைக் கொண்டு கணக்குப் போட்டுள்ளது ஆந்திர மாநில அரசு.