கேரளாவை மிரட்டும் மழை.. ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

வியாழன், 6 ஜூலை 2023 (17:35 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் எடுத்துள்ளது. 
 
தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
 கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில்  ரெட் அலர்ட் எச்சரிக்கையும், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை அலர்ட் எச்சரிக்கையும்,  கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்