இடதுசாரி நக்சல் இயக்கங்களின் அச்சுறுத்தலில் இந்தியாவுக்கு 3 வது இடம் ...

புதன், 6 பிப்ரவரி 2019 (10:25 IST)
இடதுசாரி மாவோயிஸ்ட் நக்சல் இயக்கங்களால் பயங்கரவாத  அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இந்தியா இருப்பதாக மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமானஎம்.எம்.கே.நாராயணன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், ஹூவாய் நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்ப அலைபேசிகள் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது குறித்து சிந்திக்க வேண்டியதுள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும் ஆயுத அணிவகுப்பில் ரஷியாவும், சீனாவும் இணைந்து ஈடுபட்டுதுள்ளது  எல்லோரையும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடமும் காஷ்மீரில் பாகிஸ்தானால் தான் நிலைமை சீரற்றதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்