பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

Senthil Velan

வெள்ளி, 5 ஜூலை 2024 (16:40 IST)
பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் வளர்ச்சி மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகம் வருடாந்தர பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் முன் எப்போதும் இல்லாத உயர் அளவை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் ரூ.1,26,887 கோடியாக உயர்ந்து, முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பைவிட 16.8% அதிகரித்திருக்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியும் 2023-24 நிதியாண்டில் சாதனை அளவாக ரூ.21,083 கோடியை எட்டியுள்ளது என்று ராஜ்நாத் சிங் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் வளர்ச்சி மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். 

ALSO READ: பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!
 
இந்த சாதனையில் பங்களித்த அனைவருக்கும் பாராட்டுகள் என்றும் நமது திறன்களை மேலும் மேம்படுத்தவும், இந்தியாவை முன்னணி சர்வதேச பாதுகாப்பு உற்பத்தி மையமாக நிலைநிறுத்தவும் ஆதரவான சூழலை உருவாக்க முழுமையாக உறுதிபூண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது நமது பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி, நம்மை தன்னிறைவாக மாற்றும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்