பாஜக ஆட்சியமைக்க யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஆனால், பிரச்சனை அடிப்படையில் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று மோடியை சந்திக்க சென்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், 9 எம்.பி.க்களுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, மோடியின் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாக ஜெகன்மோகன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, "எங்கள் நிலைமையை மோடி புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம். அவருக்கு ஆட்சியமைக்க யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஆனால், பிரச்சனை அடிப்படையில் அவருடைய ஆட்சிக்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம்" என்று கூறினார்.