கச்சத்தீவில் இந்து கோவில்: இலங்கை எம்பி வலியுறுத்தல்

செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (17:27 IST)
கச்சத்தீவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று இலங்கை எம்பி சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


 

 
தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு காரணமான கச்சத்தீவை மீட்க கோரி தமிழ்நாட்டில் ஒரு சில அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
 
கச்சத்தீவில் இந்தியாவிற்கு உரிமை இருக்கிறது ஆகையால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
 
இப்படி அரசியில் கட்சியினரும், தலைவர்களும் ஒரு பக்கம், குரல் கொடுத்து அரசியல் செய்கின்றனர். மறுபக்கம் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டுதான் வருகின்றனர்.
 
இந்நிலையில் மதுரையில் பேட்டியளித்த இலங்கை எம்பி சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறியதாவது:-
 
ராஜபக்க்ஷே ஆட்சியில் இருந்ததை விட தற்போது இலங்கையில் நிலைமை பரவாயில்லை. கச்சத்தீவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று இலங்கை சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்