அதேபோல், சமீபத்தில் அந்த பம்பில் தண்ணீர் பிடித்து குளித்துள்ளனர். அதன் பின் அவர்கள் எல்லோருக்கும் தலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தலையிலிருந்து முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட தொடங்கியுள்ளது. கடைசியில் எல்லா முடிகளும் கொட்டி, தலை மொட்டை அடித்தது போல் ஆகிவிட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே ஒரு மருத்துவரிடம் சென்று விசாரித்தனர்.
அவர்கள் குளித்த தண்ணீரில்தான் ஏதோ பிரச்சனை என்பதை யூகித்த அந்த மருத்துவர், உடனடியாக இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உடனே அந்த இடத்திற்கு சென்று அந்த தண்ணீரை ஆய்வு செய்தனர்.