தொடரும் கலவரம்; டெல்லியில் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

சனி, 26 ஆகஸ்ட் 2017 (15:34 IST)
குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் கலவரம் வெடித்தது.


 

 
இந்த கலவரத்தில் 31 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பதட்டமான சூழலை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
அரியானா மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு நீதிமன்றம் அம்மாநில அரசை குற்றம்சாட்டியுள்ளது. பஞ்ச்குலா பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
மேலும் பஞ்ச்குலா மற்றூம் சிர்சா ஆகிய பகுதிகளில் தொடந்து கலவரம் நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்