குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் பதவி விலக கோரிக்கை

சனி, 6 பிப்ரவரி 2016 (05:00 IST)
குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
குஜராத் மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேலின் மகள் அனார்ஜெஷ் பட்டேல் என்பவர், வெய்ல்டு உட்ஸ் ரிசார்ட்ஸ் மற்றும் ரியாலிட்டிஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக செயல்பட்டு வருகிறார்.
 
இந்த நிறுவனத்திற்காக குஜராத் அரசு கிர்காடு பகுதியில் சுமார் 250 ஏக்கர் நிலம் குறைந்த விலைக்கு  ஒதுக்கியுள்ளதாகவும், இதனால், அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
 
இந்த விவகாரம் குறித்து, சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பு ஏற்று, முதல்வர் ஆனந்தி பென்பட்டேல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
 
ஆனால், பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என குஜராத் முதல்வர்  ஆனந்தி பென்பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்