இந்த நிறுவனத்திற்காக குஜராத் அரசு கிர்காடு பகுதியில் சுமார் 250 ஏக்கர் நிலம் குறைந்த விலைக்கு ஒதுக்கியுள்ளதாகவும், இதனால், அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து, சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பு ஏற்று, முதல்வர் ஆனந்தி பென்பட்டேல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.