ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை ஊடகங்களில் பதிவு செய்யக் கூடாது என்பது உள்பட நான்கு அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் ஆயுதப்படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊடகங்கள் நேரில் சந்திக்கவோ, தொடர்பு கொள்வது கூடாது.
ஆயுதப்படையினரின் வீட்டு முகவரி, குடும்ப புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
செய்தி சேகரிப்பு தொழில் முறை மற்றும் செயல்பாட்டு விவரங்களை மையமாகக் கொண்டு நடைபெற வேண்டும்.
யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய செய்திகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஆயுத நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெறும் போது தனியுரிமை மற்றும் ரகசியத்தை மதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகங்கள் மேற்கண்ட 4 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.