இந்த நிலையில், கடந்த வாரம் ரஷ்யா, உக்ரைனில் தீவிரமாக தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் நேற்று உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் ரஷ்யாவின் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் ராணுவம், ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவில் உள்ள விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்த பயங்கர தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர்களுக்கு சேதம் இல்லை என்றாலும், ரஷ்யாவின் 40-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவும், பல விமானங்கள் தீப்பிடித்து இன்னும் எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள், ரஷ்ய எல்லைக்குள் தொலைதூரம் சென்று விமானத் தளங்களில் உள்ள விமானங்களை அழிப்பதற்காகவே நடத்தப்பட்டதாகவும், விமானத் தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.