பல்வேறு தடைகளைக் கடந்து திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. ஜி.எஸ்.டி மசோதாவால் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் பெருகும், இந்த மசோதாவால் மத்திய அரசை விட மாநில அரசிற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும், வரி ஏய்ப்புகள் குறையும் என்று மசோதாவில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசினார். இந்த மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர் ஜி.எஸ்.டி. மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, அவையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட 197 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எதிர்ப்பின்றி மசோதா நிறைவேறியது. இதையடுத்து திருத்தப்பட்ட மசோதா மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.