எக்ஸ்பயர் ஆன லைசென்ஸை தாராளமா பயன்படுத்தலாம்: ஆனா...

திங்கள், 28 டிசம்பர் 2020 (09:37 IST)
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.  

 
இந்தியாவில் கடந்த மார்ச் மாத துவக்கத்திலேயே கொரோனா பரவத் துவங்கியதால் ஊரடங்கு போடப்பட்டது. நாடே முடங்கிய நிலையில் மத்திய, மாநில அரசுகளின் அலுவல் பணிகளும் முழுமையாக முடங்கின. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கபட்டு இயல்பு நிலி திரும்பியுள்ளது. 
 
இதனிடையே மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 2020 முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் ஆர்.சி உள்ளிட்டவை 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை செல்லும் என்று அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகே ஓட்டுனர் உரிமை வழங்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்