சுயேட்சையாக போட்டியிடுகிறேன்: முன்னாள் முதல்வர் மகன் அறிவிப்பு!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (19:31 IST)
சுயேட்சையாக போட்டியிடுகிறேன்: முன்னாள் முதல்வர் மகன் அறிவிப்பு!
கோவா மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட போகிறேன் என முன்னாள் கோவா முதல்வரின் மகன் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவா உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை தேர்தலில் பனாஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக கோவா மாநில முதல்வர் முன்னாள் மறைந்த மனோகர் பாரிக்கர் மகன் அறிவித்துள்ளார்
 
தனது தந்தையின் தொகுதியான பனாஜி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவிலிருந்து விலகி தற்போது சுயேட்சையாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்