சிறுமியை மது அருந்த செய்து பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ

வியாழன், 5 மே 2016 (16:39 IST)
நேபாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கோவா எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்


 

பாபுஷ் மொன்சரரேட் கோவாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். ஆனால் இவர் தற்போது எம்.எல்.ஏ பதவியிலிருந்து நீக்கப்பட்டு லைப் ஸ்டைல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். .

இதைத்தொடர்ந்து நேபாளத்தை சேர்ந்த அந்த சிறுமி தன் வளர்ப்பு தாயால் எம்.எல்.ஏ-வுக்கு விற்கப்பட்டதாகவும், எம்.எல்.ஏ தன்னை வலுக்கட்டாயம்மக மது அருந்த செய்து பாலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் காலை எழுந்து பார்க்கும் போது ஆடையில்லாமல் தான் இரத்த வெள்ளத்தில் இருந்ததாகவும், அருகில் எம்.எல்.ஏ ஆடையின்றி இருந்ததாகவும், குழந்தை பாதுகாப்பு கமிஷனிடம் சிறுமி கூறியுள்ளார்.
அதன்படி காவல்துறையினர் எம்.எல்.ஏ மீது மனிதர்களை கடத்தல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். மேலும், சிறுமியின் வள்ர்ப்பு தாயும் விரைவில் கைதுச்செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

 

வெப்துனியாவைப் படிக்கவும்