கணவருடன் தேனிலவுக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் போது, விமானநிலையத்தில் மாயமான பெண்ணை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது. அதன்பின் புதுமண தம்பதிகள், மேற்கு வங்க மாநிலம் டார்ஜலிங் மாவட்டத்தில் உள்ள பாக்டோக்ராவுக்கு தேனிலவுக்கு சென்றனர். அங்கு தேனிலவு கொண்டாடி முடித்து விட்டு, விமானம் மூலம் கடந்த திங்கள் கிழமை மாலை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்தனர்.
விசாரணையில் இறங்கிய போலீசார், விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தனர். அதில் கழிவறைக்குள் செல்லும் அந்த பெண், சிறிது நேரம் கழித்து புர்கா அணிந்து வெளிய வருவதையும், மேலும் அந்த பெண் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு சென்று, அங்கு அவருக்காக காத்திருக்கும் ஒரு வாலிபருடன் செல்வதும் பதிவாகியிருந்தது.