இன்று முதல் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

புதன், 16 மார்ச் 2022 (07:01 IST)
இன்று முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பெரியோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளன
 
12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்