திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க முன்பதிவு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலரால் ஆன்லைன் புக்கிங் மேற்கொள்ளப்பட முடியவில்லை. இந்நிலையில் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு நகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் ஆந்திர பேருந்துகளிலேயே பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.