வங்க கடலில் தமிழகத்தின் அருகே நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திர கடலோர பகுதியில் நேற்று நிலைகொண்டு இருந்தது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லூர், சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.