ஹைதராபாத்தில் சிங்கங்களுக்கு கொரோனா… அதிர்ச்சி செய்தி!

புதன், 5 மே 2021 (08:23 IST)
இந்தியாவில் முதல் முதலாக 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் ஒரு கோடி பேருக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் விலங்குகள் எதற்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில் இப்போது முதல் முதலாக ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கு காய்ச்சலும், சரியாண உணவு உட்கொள்ளாத பிரச்சனையும் இருந்ததால் சோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கன்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்