டெல்லியை முடக்கும் வானிலை; டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு! – விவசாயிகளின் வேற ப்ளான்!

புதன், 6 ஜனவரி 2021 (08:28 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நடக்க இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்ந்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசுடன் நேற்று நடந்த 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்று டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் டெல்லியில் நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக இன்று டிராக்டர் பேரணி நடைபெறாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நாளை சிறிய அளவில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும், 28ம் தேதி அன்று பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்