இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம் திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று இது. திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதிக்கு வந்த சென்னை பக்தர் ஒருவரிடம், போலி இணையதள டிக்கெட் இருந்ததை கண்டு தேவஸ்தான நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு, அந்த டிக்கெட்டை கைப்பற்றி தீவிர விசரணை நடத்தினர். அப்போது. templeyatri.com என்ற போலியான இணையதளத்தில் டிக்கெட்டு முன்பதிவு செய்துள்ளது தெரிய வந்ததது.