ரயுல்வே துறையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர், கடந்த 2004ஆம் ஆண்டு ரெயில்வே காவல்துறை தலைமை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய பி.எஸ்.சித்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து அப்போது ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது அந்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தன்னை இடமாற்றம் செய்தனர் என்றும் பிறகு வேலைநீக்கம் செய்தன்ர் என்றும் கூறியுள்ளார்.