உயிரிழந்த மாணவன் சாய்நாத் தான் அனுபவித்த ராகிங் கொடுமைகளை கடிதத்தில் எழுதியுள்ளார். இதனை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “ரகிங்கை நிறுத்துங்கள்” மேலும் “இந்த நிலமைக்கு காரணம் மூத்த மாணவர்கள் அப்படி செய்திருக்க கூடாது”என்றும் எழுதியுள்ளார். ஆனால் அந்த மாணவர்கள் யார் என்று அந்த குறிப்பில் தெளிவாக இல்லையென இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.