நரேந்திர மோடி போட்டியிட்ட வதோதரா தொகுதியில் அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சி தலைவரான் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் போட்டியிட்ட வாரணாசி தொகுதியிலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெறுவது உறுதியான நிலையில், வரும் 21 ஆம் தேதி முதன் முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.