நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரும் வலதுசாரி "பார்ட்டி ஃபார் ஃபிரீடம்" கட்சியின் தலைவருமான கீயர்ட் வில்டர்ஸ், ஷர்மிஷ்டா பனோலியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளை பெறுவதற்காக இந்து பெண்ணை கைது செய்ய்துள்ளதாகவும் இதுவொரு திமிரான நடவடிக்கை என்று கூறியதுடன், அவரை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.
"தைரியமான ஷர்மிஷ்டா பனோலியை விடுதலை செய்யுங்கள்! அவர்கள் சொன்னது உண்மைதான். அவரது கருத்துகளுக்காக கைது செய்தது வாக்கு சுதந்திரத்திற்கு அவமானம். அவரை தண்டிக்க வேண்டாம் என வில்டர்ஸ் X தளத்தில் பதிவு செய்தார். அதனுடன் இணைக்கப்பட்ட புகைப்படத்தில், "All eyes on Sharmistha" என்று எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கொல்கத்தா போலீசார், ஷர்மிஷ்டா பனோலியை, சமூக ஊடகங்களில் பதிவிட்ட வீடியோக்கள் தொடர்பாக கைது செய்தனர். அந்த வீடியோக்களில் அவதூறான மற்றும் மத சார்ந்த விரோத பேச்சுக்கள் இருந்ததுடன், பாலிவுட் நடிகர்கள் "ஆபரேஷன் சிந்தூர்" குறித்து பேசாததற்காக அவர்களை குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதும், ஷர்மிஷ்டா அந்த வீடியோவை நீக்கி, மன்னிப்பும் கேட்டுள்ளார்.