ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன் என பாலிவுட் திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்கள் யாரும் கூறவில்லை என்று மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு சட்டக் கல்லூரி மாணவி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் மத பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி மேற்குவங்க அரசு அவரை கைது செய்தது.
இதற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டக் கல்லூரி மாணவியின் கருத்துக்கள் சிலருக்கு வேதனையையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில், அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு வீடியோவையும் நீக்கி மன்னிப்பும் கேட்டார். இருப்பினும், ஒரு மாணவியின் எதிர்காலத்தையே கூட கருத்தில் கொள்ளாமல், போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், சனாதன தர்மத்தை பற்றி இழிவாக பேசுபவர்களை மேற்குவங்க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பேசியவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்க மேற்குவங்க முதல்வர் மந்தா பாலாஜி, "பிளவுபடுத்தும் அரசியலின் மூலம் சமுதாய கலவரங்களை தூண்ட முயல்பவர்களை அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது," என்று தெரிவித்துள்ளார். அதற்கு மீண்டும் பதில் அளித்த பவன் கல்யாண், "மதச்சார்பின்மை என்பது இரு பக்கமும் இருக்க வேண்டும். ஒரு மதத்தை மட்டும் தாக்குபவர்களை கைது செய்து, இன்னொரு மதத்தை தாக்குபவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது," என்றும் தெரிவித்துள்ளார்.