பீகார் சட்டசபை தேர்தலில் கடும் போட்டிக்கு பின்பு வென்றிக்கனியை பறித்தார் நிதிஷ்குமார்- லாலு பிரசாத் யாதவ் கூட்டணி. இந்த நிலையில், வரும் 20 ஆம் தேதி பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார்.
மேலும், இந்த விழாவுக்கு வருமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கும் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்தார். பல்வேறு காரணங்களால் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. ஆனால், இந்த அழைப்பை ஏற்று திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கருணாநிதி வெளியிட்டுள்ளார்.