ஆனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வந்த போது, அதில் அவரே போட்டியிட்டார். எனவே, அதில் அவர் வெற்றி பெற்றால், அடுத்து அவரின் குறி முதல்வர் பதவிதான் என செய்திகள் வெளியானது. மேலு, ஓ.பி.எஸ் அணி கொடுத்த குடைச்சலில் இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைக்காமல் போனது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பு ரூ.89 கோடி அளவிற்கு பணப்பட்டுவடா செய்ததற்கான ஆதாரங்களை வருமான வரித்துறையினர், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றினர். மேலும், இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.50 கோடி பேரம் பேசி, சுகேஷ் சந்தர் என்ற நபரிடம் ரூ. 10 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாக டெல்லி போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.