திருப்பதியில் 3000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம்டிக்கெட் விநியோகம்!!

வெள்ளி, 19 ஜூன் 2020 (23:28 IST)
திருப்பதியில் கடந்த 11 ஆம் தேதி முதல் ஏழுமலையானை தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரூ.300 சிறப்புத் தரிசன வரிசையில் 3000 பக்தர்களும், இலவச தரிசன வரிசையில் 3000 பக்தர்களும், விஐபி தரிசன வரிசையில் 750 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் மேலும் கூடுதலாக 3000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் ரூ.300 ரூபாய் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும், இதன் காரணமாக தினமும் 9, 750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கபடுவர் என தெரிவித்துள்ளது.

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்