புவி வெப்பமயமாதலால் அதிகரிக்கும் புயல்கள்..

Arun Prasath

புதன், 13 நவம்பர் 2019 (20:26 IST)
புவி வெப்பமயமாதலால் கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது அதிகரித்துள்ளது இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக வங்க கடலிலும், அரபிக்கடலிலும் புயல் உருவாவது அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32% அதிகரித்துள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 11% உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புவி வெப்பமயமாதலே இதற்கு காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்